Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. அதிர்ச்சி காரணம்..!

Mahendran
வியாழன், 6 ஜூன் 2024 (18:08 IST)
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேஷ் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவை சேர்ந்த கங்கனா ரனாவத்தை பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சண்டிகர் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகை கங்கனா ரனாவத் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கூறியதாகவும் அதற்காக தான் அந்த பெண் காவலர் கங்கனா ரனாவத்தை அறைந்ததாகவும் கூறப்படுகிறது 
 
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் துறைரீதியாக அந்த பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டதை அடுத்து சமாதானமாகிய கங்கனா ரனாவத் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது 
 
கங்கனா ரனாவத்தை கன்னத்தில் பெண் காவலர் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments