அணை கட்டியது கர்நாடக மக்கள் வரி பணத்தில்: அனுபவிப்பது தமிழக மக்களா? குமாராசாமி பேச்சால் சர்ச்சை

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (16:25 IST)
கர்நாடக முதல்வர் குமாரசாமி, முதல்வராக பணியேற்றதில் இருந்து கோவில் கோவிலாக சென்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வருகிறார். 
இந்நிலையில், அவர் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசிய சில கருத்துக்கள் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அவர், கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், இதே போன்று எப்போதும் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என தமிழக அரசு காவேரி மேலாண்மை வாரியத்திடம் மனு அளித்துள்ளது வியப்பை தருகிறது. 
 
தமிழக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரிக்க வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவா நாங்கள் அணை கட்டியுள்ளோம். அணைகள் கர்நாடக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. எங்களது தேவைகளுக்காக நாங்கள் அணை கட்டியுள்ளோம். தமிழக மக்களுக்கு தண்ணீர் திறந்துவிடவும், தமிழகத்தை காப்பாற்றவும் அணை கட்டவில்லை என கூறியுள்ளார். 
 
மேலும், மேகதாதுவில் அணை கட்ட கோரியுள்ளோம். அதற்கு அனுமதி கிடைத்தால் மாநிலத்தில் கூடுதல் தண்ணீர் சேகரித்து வைக்கமுடியும் என அவர் பேட்டியளித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments