Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
சனி, 26 ஜூலை 2014 (16:12 IST)
கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மாலை 6.30 மணி அளவில் ஒரு மெட்ரோ ரயில் நிலையம் தகர்க்கப்படும் என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார்.

இதுபற்றி மெட்ரோ நிலைய அதிகாரிகள் லால்பஷார் காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்று காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டலுக்காக மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments