Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் கொடு அல்லது உன்னை கொடு: பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரிகள் அட்டூழியம்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (15:59 IST)
கேரள மாநிலத்தில் கிருஷ்ணவேணி(34) என்பவர் தன்னிடம், கிராம நிர்வாக அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும், அதைக் கொடுக்க முடியாததால் அவரை அழைத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


 

 
இதனால் கேரள தலைமைச் செயலகப் பகுதியில், கிருஷ்ணவேணி எனக்கு நீதி வேண்டும் என்ற பேனருடம், ஒரு உண்டியலை வைத்துக்கொண்டு போராட்டம் செய்து வருகிறார்.
 
கேரள அரசு ஊழியர்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணவேணி இதுகுறித்து கூறியதாவது:-
 
எனது நிலம் தொடர்பான ஆவணங்களை அங்குள்ள அதிகாரிகள் மாற்றி, வேறொருவரின் நிலத்தை நான் ஆக்கிரமித்துள்ளது போல் மாற்றியுள்ளனர். இது தொடர்பான பிரச்சனையை தீர்க்க என்னிடம் பணம் கேட்டனர்.
 
நான் தர முடியாது என்று கூறியதால், உன் கற்பை கொடு என்று மிரட்டினர். அங்குள்ள இரண்டு அதிகாரிகள் என்னிடம் இப்படி நடந்து கொண்டனர். ஒருவர் என்னிடம் முத்தம் கேட்டார். மற்றொருவர் என்னுடன் வந்து உல்லாசமாக இரு என்றார்.
 
மேலும் இதுகுறித்து டிஎஸ்பி அஜி என்பவர் மீதும் கிருஷ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் டிஎஸ்பி அஜி மறுத்துள்ளார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments