Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் எகிறும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 24,296 பேர் பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:07 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் படிப்படியாக அதிகரித்து வருவது அம்மாநில மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
 
கேரளாவில் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வரும் நிலையில் பாதிப்பு சிறிதும் குறையவில்லை என்பது மட்டுமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,296  என்றும் கொரோனாவால் ஒரே நாளில் பலியானவர்களின் எண்ணிக்கை 173 என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 19,349 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அம்மாநில மக்களை மட்டுமின்றி அண்டை மாநில மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments