Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதி சிறுமிகளுக்கு மது கொடுத்து வன்கொடுமை! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:31 IST)
கேரளாவில் பள்ளி விடுதிக்குள் நுழைந்து சிறுமிகளுக்கு மது கொடுத்து வன்கொடுமை செய்த 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடினம்குளத்தில் உள்ள கான்வெண்ட் ஒன்றில் கடந்த சில தினங்கள் முன்னதாக ஆசாமிகள் சிலர் தாவி குதித்ததை அப்பகுதியில் இரவு நேர காவல் பணியில் இருந்த போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருவரும் கான்வெண்ட் விடுதிக்கு சென்று அங்குள்ள சிறுமிகள் சிலருக்கு மது கொடுத்து மயக்கமாக்கி பின்னர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பெண் போலீஸார் அந்த கல்வி நிறுவனத்திற்கு சென்று அங்குள்ள சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் நீண்ட காலமாக இப்படி வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வன்கொடுமை சம்பவத்தில் மேலும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கும் நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்