Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ராட்சத எரிகல் விழுந்ததாகத் தகவல்: பேரிடர் தடுப்பு துறையினர் விரைந்தனர்

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (16:51 IST)
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அம்மாநில இயற்கை பேரிடர் தடுப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
 
கேரள மாநிலத்திரலுள்ள திரிச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் வான்வெளியில் மிகப்பெரிய எரிகோளம் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் பீதியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
மேலும்,  அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றதாகவும், அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில் ராட்சத எரிகல் விழுந்ததைப் போல மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, சுற்றுப்புற தரைப்பகுதி கருகிப்போய் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து, கேரள மாநில இயற்கை பேரிடர் தடுப்பு துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
 
இது குறித்து ஆய்வு மேற்கொண்டப்பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments