Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்தி பிரியாணி சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (18:45 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் மாணவி ஒருவர் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. 
 
கேரளாவில் 19 வயது மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி என்பவர் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. காசர்கோடு என்ற பகுதியைச் சேர்ந்த இந்த மாணவி கடந்த மாதம் ஹோட்டல் ஒன்றில் தரமற்ற மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்தார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
ஆனால் அந்த மாணவியின் மரணத்திற்கு காரணம் எலி விஷம் என்று தெரிய வந்துள்ளது. மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி செல்போனில் எலி விஷம் குறித்து கூகுளில் தேடி உள்ளார் என்று  தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. 
 
இதனை அடுத்து மாணவி அஞ்சு ஸ்ரீ எலி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பதுதான் உண்மை என்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சென்னையை தவிர்ப்பது ஏன்? பயணிகள் குமுறல்.

வார இறுதி நாளில் குறைந்த தங்கம் விலை.! சென்னையில் எவ்வளவு தெரியுமா.?

மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் பதவி விலகுகிறேன்: சித்தராமையா

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை.. காவல் கண்காணிப்பாளர் சொன்ன முக்கிய தகவல்..!

திமுகவை கண்டித்து போராட்டத்தில் குதித்த அதிமுக - மதுரையில் அக்.9-ல் உண்ணாவிரதம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments