Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் கொடுக்க முயன்ற கெஜ்ரிவால் மகளுக்கு சிறை தண்டனையா?

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (21:09 IST)
லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட்டுனர் பழகுனர் உரிமம் வாங்க மண்டல போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேவையான ஆவணங்களை அளிக்காமல் அதற்கு பதில் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.
 

 
ஆனால் அந்த அதிகாரி பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இதனை கெஜ்ரிவால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து முன்னாள் டெல்லி தலைமைச் செயலாளர் ஒமேஷ் மற்றும் பகத் சிங் புரட்சிப்படை தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா ஆகியோர் கெஜ்ரிவால் மகளின் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்படி லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்பதால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments