Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டமாக ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்கள்! – காஷ்மீர் அரசியலில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (08:30 IST)
காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நிலையில் நீண்ட காலம் கழித்து சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக காஷ்மீர் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் காங்கிரஸின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சிக்கள் ஆகியோர் மொத்தமாக தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மாநில கட்சி தலைவர் குலாம் அகமது மிர் தங்களை புறக்கணிப்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது. இது தேர்தலில் காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments