Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (14:49 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள மாலூர் காவல் நிலையத்தில் பணி புரியும் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள, இந்த மாலூர் காவல் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராகவேந்திரா(44).  இவர் நரசபுரா என்ற பகுதியில் வசித்து வருகிறார்.
 
இவர் இதற்கு முன் பெங்களூர் புறநகர் பகுதியான சர்ஜாபுரா, நந்தகுடி காவல் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அவர், இந்த காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.  கொலை வழக்குகளை துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பதில் இவர் கை தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், நேற்ற இரவு பணிக்கு வந்த அவர், அதிகாலையில் தனது அறைக்குள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்று எழுதி வைத்துள்ளார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
 
சமீபகாலமாக போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments