Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிடம் இருந்து தம்பியை காப்பாற்றிய ரியல் ஜல்லிக்கட்டு வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (15:39 IST)
ஜல்லிக்கட்டு காளையை பயிற்சி பெற்றவர்கள் அடக்கி வரும் நிலையில் 8வயது சிறுமி ஒருவர் தனது தம்பியை மாட்டிடம் இருந்து காப்பாற்ற எடுத்த பல்வேறு முயற்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பனார்பாக் தாலுகாவில் வீட்டு வாசலில் தனது தம்பியுடன் விளையாடி கொண்டிருந்தார் 8 வயது சிறுமி. அப்போது ஒரு மாடு ஆவேசமாக இருவரையும் நோக்கி பாய்ந்தது. உடனே தனது உடன்பிறந்த தம்பியை கையில் எடுத்து கொண்டு மாட்டிடம் இருந்து தப்பிக்க போராடுகிறார் அந்த சிறுமி. மாடு விடாமல் முட்ட முயற்சித்தபோதிலும் தைரியமாக மாட்டுடன் போராடி தனது தம்பியை காப்பாற்றினார்.

அப்போது சிறுமியின் சத்தம் கேட்டு அருகில் இருந்த ஒருவர் ஒரு கட்டையை எடுத்து மாட்டை விரட்டினார். ரியல் ஜல்லிக்கட்டு வீராங்கனையாக மாறிய அந்த 8 வயது சிறுமிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments