Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவை இப்படி பேசலாமா? – ஜேபி நட்டா கண்டனம்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:28 IST)
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியது சர்ச்சையான நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இளையராஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளையராஜா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இசையமைப்பாளர் இளையராஜா அவரது கருத்தை கூறியதற்காக அவரை இப்படி வசை பாடுவது சரியா?” என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments