Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இலங்கையிடம் மன்னிப்பு கேட்பாரா மோடி?': காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி..!

Mahendran
திங்கள், 10 ஜூன் 2024 (10:50 IST)
கச்சத்தீவு விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய பிரதமர் மோடி இலங்கையிடம் மன்னிப்பு கேட்பாரா? என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்த போது இலங்கைக்கு காங்கிரஸ் ஆட்சியின் போது தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ஜெயராம் ரமேஷ் ’நேற்றைய பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் கலந்து கொண்டுள்ளதை நினைவுப்படுத்தி பாருங்கள். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் எந்த அளவுக்கு திரித்து பொய்யாக பேசியுள்ளார் என்று  நினைத்து பாருங்கள்.

பொறுப்பற்ற முறையில் இந்தியா இலங்கை இடையிலான உறவை சீர்குலைக்கும் விதத்தில் அவர் பேசியுள்ளார். அதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள். மோடியும் அவரது கட்சியினரும் அண்டை நாட்டின் கொள்கையை மீறி இப்படி ஒரு சர்ச்சை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்பார்களா என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்! - கன்னியாகுமரியில் ஜூன் 22-இல் நடைபெறுகிறது

2400 ரூபாய் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும்.. அரசு மருத்துவமனை முன் நடக்கும் வியாபாரம்.. அதிர்ச்சி தகவல்..!

KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி: எஞ்சினியர் கைது..!

10 நிமிடம் சார்ஜ் செய்தால் 27 மணிநேரம் பயன்படுத்தலாம்! வந்துவிட்டது ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z3..!

அடுத்த கட்டுரையில்
Show comments