Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு அரசு வேலை! ஜெகன் மோகன் அதிரடி!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (13:32 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு நிரந்தர அரசு வேலை வழங்கி இருக்கிறார். 
 
ஆந்திர முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது ஒரே நாளில் ஒன்றே கால் லட்சம் நிரந்தர அரசு நியமித்துள்ளார். 
 
500 வகையான பொது சேவைகள் வழங்க புதிய நிர்வாக நடைமுறையாக, கிராம செயலகத்தையும், நகராட்சி தொடர்பான சேவைகளுக்காக நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் டிசம்பர் முதல் வாரத்தில் ஆந்திர அரசு செயல்படுத்துகிறது. 
இதற்காக கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 2,29,804 பேரில் 1,26,728 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதன் பின்னர் அவர் பேசியது பின்வருமாறு, 
 
ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டது, இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. ஒரே நேரத்தில் இவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதுடன், வெறும் இரண்டே மாதங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள சாதனை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும் என பெருமிதம் கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments