Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்து கொண்ட ஐடி ஊழியர்கள்

Webdunia
திங்கள், 29 மே 2017 (05:54 IST)
ஒரு காலத்தில் ஐடி ஊழியர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு வலம் வந்தவர்கள் இன்று பரிதாபமான நிலையில் உள்ளனர். இந்திய ஐடி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளதால் ஐடி ஊழியர்கள் கடும் பாதிப்பில் உள்ளனர்.



லட்சக்கணக்கில் சம்பளம் என்றவுடன் வீக் எண்டில் பார்ட்டி, தவணை முறையில் அபார்ட்மெண்ட் வீடு, கார், உள்பட சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்ட ஐடி ஊழியர்கள் தற்போது திடீரென வேலை பறிபோவதால் நட்டாற்றில் விடப்பட்டது போன்ற நிலையில் உள்ளனர்.\

முதல்கட்டமாக ஐடி ஊழியர்களுக்கு இந்த நிலை ஏற்பட காரணம் அவர்களது கண்டுபிடிப்புதான். ஆட்டோமேஷன் என்ற முறையை ஐடி ஊழியர்கள் தான் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்களது கண்டுபிடிப்பே இப்போது அவர்களுக்க் ஆப்பு வைத்துள்ளது. ஆட்டோமேஷன் மூலமாக ஐடி சேவையின் அடிமட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் நிலையில், இதுசார்ந்த பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அனைவருமே, தேவையற்றவர்களாக கருதப்படுகின்றனர்,.

அதுமட்டுமின்றி பல இந்திய ஐடி ஊழியர்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜியில் அப்டேட் இல்லை. இன்னும் பழைய முறையிலேயே கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்து வருவதாகவும், பணிச்சுமை, குடும்ப சுமை, மன அழுத்தம் காரணமாக அவர்களால் அப்டேட் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments