Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவையா இந்த அவமானம்! ஐ.ஆர்.சி.டி.சியில் புகார் அளித்து பல்பு வாங்கிய வாடிக்கையாளர்!

Webdunia
புதன், 29 மே 2019 (22:31 IST)
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தனக்கு ஆபாச விளம்பரங்கள் வருவதாக புகார் அளித்த ஒரு வாடிக்கையாளருக்கு ஐ.ஆர்.சி.டி.சி அளித்த பதிலால் செம பல்பு கிடைத்துள்ளது
 
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் தற்போது கூகுள் விளம்பரமும் வருகிறது. இந்த விளம்பரத்தின் மூலமும் எக்கச்சக்க வருமானம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஆனந்தகுமார் என்ற வாடிக்கையாளர் ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகளுக்கும், ரயில்வே அமைச்சருக்கும் ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் நான் டிக்கெட் புக்கிங் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் லாகின் செய்தபோது ஆபாச விளம்பரங்கள் வருவதாகவும், இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த புகாரில் அவர் பதிவு செய்திருந்தார்.
 
இந்த புகாருக்கு பதில் அனுப்பிய ஐ.ஆர்.சி.டி.சி, "ஐஆர்சிடிசி கூகுள் விளம்பர சேவையை பயன்படுத்தி வருவதாகவும், அந்த விளம்பரங்கள் பயனாளிகள் ஏற்கனவே இணையத்தில் பார்த்த விஷயங்களை சார்ந்தே வரும் என்றும் கூறியுள்ளது. அதாவது ஒரு நபர் ஆபாச இணையதளங்களை அதிகம் பார்த்திருந்தால் அவருடைய ஹிஸ்ட்ரியை வைத்தே அவருக்கு வரும் விளம்பரங்களும் இருக்கும் என்பதே இதற்கு அர்த்தம். எனவே ஆனந்தகுமார் அடிக்கடி ஆபாச தளங்களை பார்த்ததால்தான் அவருக்கு இந்த விளம்பரங்கள் வந்திருப்பதாக அந்த பதிலில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த பதிலால் செம பல்பு வாங்கிய புகார் அளித்த நபர் தற்போது நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments