Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? ஐ.ஆர்.டி.சி. என்ன சொல்கிறது??

Arun Prasath
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:43 IST)
காசி மஹாகால் விரைவு ரயிலில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? என்பது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம் அளித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் வாரணாசி, உஜ்ஜைன், ஜான்சி, கான்பூர் வழியாக  சிவன் ஸ்தலங்களை இணைக்கும் காசி மஹாகால் என்னும் சிறப்பு ரயில் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த ரயிலில் ஏசி வசதியுடன் குறைவான சத்தத்தில் சிவன் பாடல் ஒலிக்கப்படுகிறது. மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ரயிலில் பி-5 கோச்சின் 64 ஆவது இருக்கையை சிவனுக்காக ஒதுக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இதனை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்துள்ளது. ”ரயிலின் தொடக்க ஓட்டம் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர சிவன் புகைப்படம் வைத்து பூஜை செய்யப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments