Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு; கார்த்தி சிதம்பரம் கைது தடை நீட்டிப்பு

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:03 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. . 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிரடியாக கைது செய்தது. கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்தது.
 
இதையடுத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியும், அதேபோல் அவரை ஏப்ரல் 16 ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார். 
அந்த காலக்கெடுவானது இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வருவதால், அவரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை  மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments