Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்துச் செல்வதே எங்கள் நோக்கம்: வெங்கையா நாயுடு

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (09:53 IST)
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு 30 அரசியல் கட்சிகளின் ஆதரவு இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்துச் செல்வதே எங்கள் நோக்கம் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்  வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.


 

 
சரக்கு மற்றும் சேவை வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மக்களின் மனநிலை, அதற்கு ஆதரவாகவே உள்ளது.
 
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 32 கட்சிகளில், 30 கட்சிகள், இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆகவே, மசோதா நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
 
ஆயினும், காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்துச் செல்வதே எங்கள் நோக்கம். அதன் பதிலுக்காக காத்திருக்கிறோம். மக்களவையில் எதிர்க்காத காங்கிரஸ் கட்சி, அரசியல் காரணங்களுக்காக மேல்சபையில் எதிர்க்கிறது. இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments