Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முன்னேற்றம் உலகளவில் நமது வலிமையின் அடையாளம் - பிரதமர் மோடி

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:18 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்- 3   எனும் விண்கலத்தை  சமீபத்தில் ஸ்ரீகரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணுக்கு  அனுப்பிய நிலையில்,   விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக  நிலவில் தரையிறங்கியது.

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதியை  இனி 'தேசிய விண்வெளி தினமாகக்' கொண்டாடுவதற்கு மத்திய அரமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

சந்திரயான் 3 விண்கலம் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்ற பெயரிடப்பட்டதற்கும் மத்திய பாஜக அமைச்சரவை வரவேற்றுள்ளது.

இதுகுறித்து, பிரதமர் மோடி இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மகிழ்ச்சியில் மத்திய அமைச்சரவையும் ஈடுபட்டுள்ளது.    நமது விஞ்ஞானிகளின் (இஸ்ரோ) சாதனையை அமைச்சரவை பாராட்டுகிறது… இது விண்வெளி அமைப்பில் வெற்றிமட்டுமல்ல…. இந்தியாவின் முன்னேற்றம்  உலகளவில் நமது வலிமையின் அடையாளமாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அனுசரிக்கப்படுவதை மத்திய அமைச்சரவை வரவேற்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments