$100000 கொடுத்து H-1B விசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. இந்தியாவுக்கு திரும்புங்கள்.. இளம்பெண்ணின் வைரல் பதிவு..!

Siva
ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (10:51 IST)
பெங்களூரை சேர்ந்த ராதிகா அகர்வால் என்ற பெண், தனது அமெரிக்க பயண அனுபவம் குறித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மூன்று முறை H-1B விசா கிடைக்க தவறிய நிலையில்,  L1 விசா கிடைத்த பிறகும் அவர் ஏன் இந்தியாவிற்கு திரும்பினார் என்பதை அந்த பதிவில் விளக்கினார். 
 
ராதிகா அகர்வால் தனது பதிவில், அமெரிக்காவில் பணிபுரிவதை விட இந்தியாவிற்கு திரும்புவது ஏன் சிறந்தது என்பதற்கான நான்கு முக்கிய காரணங்களை விவரித்துள்ளார்:
 
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப்
 
தனது பெற்றோருடன் முக்கியமான வாழ்க்கை தருணங்களில் அருகில் இருத்தல்.
 
வெளிநாட்டவராக இல்லாமல், ஒரு வலுவான சமூகத்தின் ஒரு பகுதியாக உணர்தல்.
 
விசா குறித்த கவலை இல்லாமல், பணியில் ரிஸ்க் எடுக்க சுதந்திரம்.
 
அவரது இந்த முடிவு, விசா கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் சிக்கித் தவிக்கும் பல இந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக, "புதிய H-1B அறிவிப்பை பார்த்து குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, இது இந்தியாவிற்கு திரும்புவதற்கான சரியான சமிக்ஞை" என்று அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments