Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எச்சரிக்கை: இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தம்!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (09:12 IST)
கொரோனா வைரஸ் பரவுதலை கருத்தில் கொண்டு படப்பிடிப்புகளை நிறுத்த தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க 16 மாவட்டங்களில் ஷாப்பிங் மால் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்புகளை நிறுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படங்கள், வெப் சீரியல்கள், டிவி சீரியல்கள் என அனைத்தும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து தயாரிப்பாளர்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments