Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய குத்துச் சண்டை வீராங்கனைக்கு தடை

Webdunia
புதன், 22 அக்டோபர் 2014 (17:28 IST)
இந்திய குத்துச் சண்டை வீராங்கனை சரிதா தேவி சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த 2014 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் சரிதா தேவி சிறப்பாக விளையாடியபோதும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால் சரிதா தேவி கடும் அதிருப்தி அடைந்தார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தையும் பெற மறுத்தார்.

மேலும் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை தன்னை வென்ற தென் கொரியா வீராங்கனைக்கு அணிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், வெண்கலப்பதக்கம் சரிதா தேவியிடமே ஒப்படைக்கப்பட்டது.

சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இந்த சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்தியது. இந்நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி மற்றும் 3 பயிற்சியாளர்களை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments