Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பயந்துவிட்டது: மனோகர் பாரிக்கர் கருத்து

Webdunia
வியாழன், 11 ஜூன் 2015 (13:11 IST)
மியான்மரில் இந்திய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் அரசு பயந்துவிட்டதாக மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவித்தார்.
 

 
கடந்த ஜூன் 4ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் சான்டெல் நகர் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பயங்கர தாக்குதல் நடத்தி 20 ராணுவ வீரர்களை சுட்டுப் படுகொலை செய்தனர்.  
 
பின்பு, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், தங்களை காப்பாற்றிக் கொள்ள, அருகில் உள்ள மியான்மர் காட்டுப் பகுதிக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டனர்.
 
இதை அறிந்த, இந்திய இந்திய ராணுவம், மியான்மர் நாட்டு எல்லைக்குள் சென்று, தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 2 இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் நிலைகுழைந்து போனார்கள். மேலும், 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 
இந்த தாக்குதல் குறித்து, மத்திய பாதுகாப்புத்துறைத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவிக்கையில், இந்தியா மீது தீவிரவாதிகள் மறைந்து இருந்து தாக்கல் நடத்திவிட்டு தப்பிவிட்டனர். ஆனால், இந்தியா அதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இந்த அதிரடி தாக்குதலில் பயம் கொண்டு சிலர் பயந்து பேசிவருவது தெளிவாக தெரிகிறது. இந்தியாவின் பாதுகாப்பில் எப்போதும் சமரசம் என்பதே கிடையாது என அழுத்தமாக கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments