Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்தி வெளியிடுவதில் இந்திய ஊடகம் 2வது இடம்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (20:45 IST)
பொய்யான செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகம் உலக அளவில் இரண்டாவது பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம் அண்மையில் உலக அளவில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது. உலக பொருளாதார மன்றத்தின் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பெரும்பாலான இந்திய ஊடகங்கள் நம்பகத்தன்மை அற்ற செய்திகளை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாகவே இந்திய ஊடகங்கள் வதந்திகளைச் செய்திகளாக வெளியிடுவது தெரியவந்துள்ளது. உலக அளவில் நம்பகத்தன்மையற்ற ஊடக நிறுவனங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. 3வது இடத்தில் அயர்லாந்து இடம்பெற்றுள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்காக வெளியிடப்படும் செய்திகளை தாங்கள் நம்புவதில்லை என பெரும்பாலான மக்கள் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments