Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.! ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!

Senthil Velan
புதன், 28 ஆகஸ்ட் 2024 (17:00 IST)
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
 
பிடிஐ செய்தி நிறுவனத்திற்காக அவர் எழுதிய கட்டுரையில், கொல்கத்தா பெண் மருத்துவர்  பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். 

நீதி கேட்டு மக்கள் போராடும் நிலையில், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்றும் பெண்களுக்கு எதிராக இதுவரை நடந்த குற்றங்களே போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, சமூகம் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் சுயபரிசோதனை செய்வது அவசியம் என்று திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார். 

பயத்தில் இருந்து பெண்கள் விடுதலை பெறுவதற்கான பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கு நாம் கடமைப்பட்டு உள்ளோம் என்றும் நிர்பயா சம்பவத்திற்கு பிறகு ஏராளமான பலாத்கார சம்பவங்களை இந்த சமூகம் மறந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த ‛ செலக்டிவ் அம்னீசியா' கொடூரமானது என குறிப்பிட்டுள்ள அவர், உண்மையை ஏற்றுக் கொள்ள வரலாற்றை எதிர்கொள்ள பயந்த சமூகங்கள், செலக்டிவ் அம்னீசியாவை நாடுகின்றன என்று கூறியுள்ளார்.


ALSO READ: திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்.! ரூ. 89.18 கோடி சொத்துக்கள் முடக்கம்.!!
 

தேசம் விழித்துக் கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்