Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெய்லி மோடியின் பிறந்தநாளா இருக்க கூடாதா? ப.சி-யின் விபரீத ஆசை!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (12:29 IST)
பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளை தினமும் கொண்டாட வேண்டும் என்று விரும்புவதாக ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவு. 
 
பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 2.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை போட்டுள்ளார். 
 
அதில், பிரதமர் மோடியின் பிறந்தநாளான நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 2.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகத்தில் மோடி பிறந்தநாளன்று தினசரி சராசரியை விட அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 
 
பிரதமர் மோடி பிறந்தநாளை தவிர மற்ற நாட்களில் செயல்படாத மாநிலங்களாகவே இவை இருந்து வருகின்றன. எனவே பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளை தினமும் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments