Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நான் ஒரு நல்ல மாணவனாக இருந்ததில்லை’: எய்ம்ஸ் மாணவர்களிடம் பேசிய மோடி

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2014 (16:59 IST)
”நான்  ஒரு நல்ல மாணவனாக இருந்ததில்லை; அதனால் படிக்கும் காலத்தில் விருதுகளைப் பெற்றதில்லை” என்று மருத்துவ மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
 
டெல்லி  'எய்ம்ஸ்' மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு  பேசுகையில் இவ்வாறு தெரிவித்த அவர், "மாணவர்கள் மாணவர்களாகவே இருக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் மாணவனை உயிர்ப்புடன் திகழ வைக்க வேண்டும்; அப்போதுதான் ஏதாவது செய்ய முடியும். பட்டம் பெற்றதும்  மாணவப் பருவம் முடிந்துவிட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாது" என்றும் அறிவுறுத்தினார்.
 
அத்துடன், மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா இன்னும் ஒரு படி பின் தங்கியிருப்பதாகக் கூறிய மோடி, இந்தியா இன்னும்  அதிகம் சாதிக்க வேண்டியிருக்கிறது என்றும்,  மாணவர்கள் நாட்டின் வளர்ச்சியில் முனைப்புடன் பங்கெடுக்க  வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments