Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் அல்ல: பிரவீன் தொகாடியா

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (19:16 IST)
ஒடிசாவில் பதட்டம் நிறைந்த காந்தமால் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பீரவீன் தொகாடியா பேசுவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்தது. இந்த நிலையில், தான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் அல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பீரவீன் தொகடியா கூறியதாவது:-

“நான் சிறுபான்மையினருக்கு எதிரானவன் கிடையாது. ஆனால் இந்து சமய சகோதர சகோதரிகளின் நலன்களுக்காக அவர்களுக்கு ஆதரவாக கண்டிப்பாக நான் பேசுவேன். இந்துக்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு இலவசமாக சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும். அனைத்து இந்துக்களும் படித்தவர்களாக வேண்டும். அப்போதுதான் அவர்களால் பிறரின் உதவி இல்லாமல் வாழ முடியும். அனைத்து இந்துக்களுக்கும் உணவு இருக்க வேண்டும். அவற்றிற்காக நாம் அனைவரும் பணம் மற்றும் அன்பை நமது பங்களிப்பாக அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments