Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை இழந்த அதிர்ச்சியில் தூக்கில் தொங்கிய பெண் சாப்ட்வேர் எஞ்சினியர்!

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (23:13 IST)
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் வேலை இழந்த அதிர்ச்சியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஜூனியர் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக ஹரிணி என்னும் பெண் வேலை பார்த்து வந்தார். இவரை சமீபத்தில் அழைத்த அவருடைய மேலாளர் இந்த மாதத்துடன் உனது வேலை பறிக்கப்படுவதாகவும், வேறு நிறுவனத்தில் நீ வேலை தேடிக்கொள் என்று கூறியதாகவும் தெரிகிறது 
 
இதனையடுத்து மனமுடைந்த ஹரினி,  தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து யாரிடமும் பேசாமல் சாப்பிட்டால் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த மாதம் 30ஆம் தேதியுடன் வேலை போய்விடும் என்றும், இன்னும் பத்து நாள் மட்டுமே வேலை இருக்கும் என்று புலம்பிக் கொண்டிருந்த ஹரிணி, ஒரு கட்டத்தில் மனம் உடைந்து தூக்கில் தொங்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹர்ணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments