Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வக்கீல் குடும்பம்: வேலியே பயிரை மேய்ந்த கதை!

மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வக்கீல் குடும்பம்: வேலியே பயிரை மேய்ந்த கதை!

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (14:54 IST)
ஹைதராபாத்தில் 14 வயது மைனர் பெண்ணை சட்டம் படித்த வக்கீல் மற்றும் அவரது மகனும் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இதனால் கர்ப்பமடைந்துள்ள அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 
 
ஹைதராபாத்தின் கிரீன் ஹில்ஸ் காலனியில் உள்ள வக்கீல் சுதாகர் ரெட்டியின்(60) வீடு மற்றும் அலுவலகத்தில் ஒரு 14 வயது பெண் வேலை செய்துவந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்த அந்த பெண்ணை வக்கீல் சுதாகர் ரெட்டியும் அவரது மகன் பரத் குமார் ரெட்டியும் பலமுறை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதனால் கர்ப்பமடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கைது செய்ய தேடுவதால் இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். இது குறித்து கூறிய அந்த பெண் நான் வேலைக்கு சேர்ந்த 6 மாதத்தில் இருவரும் என்னை பல முறை பலாத்காரம் செய்துள்ளனர். நான் இதை தடுக்கும் போது அவரது குடும்பமே சேர்ந்து என்னை தாக்குவது வழக்கம்.
 
வெளியில் இந்த விவகாரத்தை சொல்லக்கூடாது எனவும், தினமும் வேலைக்கு வரவேண்டும் எனவும் மிரட்டி வைத்திருந்தனர் என தெரிவித்தார். மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த சட்டம் தெரிந்த வக்கீல் மீது பிரிவு 376-ன் கீழ் குழந்தைகளுக்கு எதிரான செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்