Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன் தொல்லையை சமாளிக்க மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்..

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (15:59 IST)
கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க கணவனே மனைவியை கொன்றுவிட்டு, கூலிப்படை மீது கொன்றாக நாடகமாடிய விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டெல்லி பகர்பஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் பங்கஜ் மெஹ்ரா. இவரது மனைவி பிரியா மெஹ்ரா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த செவ்வாய் கிழமை இரவு இடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சில நிபர்கள் பிரியாவை சுட்டுக்கொன்று விட்டதாக பங்கஜ் மெஹ்ரா போலீசாரிடம் புகார் அளித்தார்.
 
மேலும், தான் தொழில் தொடர்பாக பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதால், கடன் கொடுத்தவர்கள் கூலிப்படையை ஏவி தனது மனைவியை கொன்று விட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார்.
 
ஆனால், போலீசாரின் விசாரணையில், அவர் கடன் பெற்றது உண்மைதான். ஆனால், அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில், மனைவியை கொன்று, அந்த பலியை கடன் கொடுத்தவர்கள் மீது சுமத்தலாம் என அவர் திட்டமிட்டது தெரியவந்தது. இதை மெஹ்ராவும் ஒப்புக்கொண்டுவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விவகாரம் அவர்கள் வசித்து வந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments