விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

Prasanth K
திங்கள், 16 ஜூன் 2025 (17:13 IST)

அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் அனைவரும் பலியான நிலையில் ஒருவர் மட்டும் தப்பித்த நிலையில், அவர் தப்பி நடந்து வந்த புதிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

 

கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787 ட்ரீம்லைனர் மாடல்) விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே மீண்டும் கீழிறங்கத் தொடங்கி மருத்துவக்கல்லூரி விடுதி ஒன்றின்மீது மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேரும் பலியான நிலையில், ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

 

விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற அந்த நபர் எப்படி உயிர் பிழைத்து வந்தார் என்பதே பலருக்கு ஆச்சர்யமாக இருந்து வரும் நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கட்டிடத்தில் விமானம் மோதி கட்டிடம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும்போது, விஸ்வாஸ் குமார் ரமேஷ் கட்டிடத்தில் உள்ளேயிருந்து காயங்களுடன் நடந்து வருகிறார். அவரை அங்குள்ளவர் பத்திரமாக அழைத்து செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments