Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிகிருஷ்ணா சடலத்துடன் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள்

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (09:12 IST)
மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகனும், ஜீனியர் என்.டி.ஆரின் தந்தையும், நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான ஹரிகிருஷ்ணா நல்கொண்டா என்ற பகுதியில் கடந்த 29 ஆம் நடைபெற்ற கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே ஹரிகிருஷ்ணா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த பின்னர், ஹரிகிருஷ்ணாவின் சடலத்துடன் மருத்துவமனையின் கம்பவுண்டர் நரசிம்மா, 3 செவிலியர்களுடன் செல்பி எடுத்து அதனை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
 
இந்த புகைப்படமானது வேகமாக பரவவே, விளம்பரம் தேட இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
 
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இரக்கமற்று செயல்பட்ட அந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மேலும் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

8000 கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக சென்னை வாலிபரை இரண்டு பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments