Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த இந்திய ஹாக்கி வீராங்கனை

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (14:23 IST)
அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
அரியானா மாநிலத்தை சேர்ந்த சர்வதேச ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா(20) இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடி வந்தார். கடந்த 2ஆம் தேதி வீட்டில் பலகலைக்கழகத்திற்கு சென்று சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யப்போவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். 
 
அதன்பின் அவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரெவாரி ரயில் நிலைய தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கடந்த புதன்கிழமை இரவு ரெவாரி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
 
இவர் 2016ஆம் ஆண்டு தென் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் இந்திய ஹாக்கி அணி விளையாடியுள்ளார். மேலும் இவரது மரணம் குறித்த காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. உண்மையிலே அவர் தற்கொலைதான் செய்துக்கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!

இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் மனு

சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப் போட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments