Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி..! பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு..!!

Senthil Velan
ஞாயிறு, 2 ஜூன் 2024 (16:04 IST)
புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
 
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதாக முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அதன்படி, நாடு முழுவதும் சுட்டெரித்து வரும் வெப்ப அலை குறித்தும், ரேமல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
 
மிசோரம், அசாம், மணிப்பூர் மற்றும் மேகலாயா மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்தார். ஆலோசனையில் வட கிழக்கு மாநிலங்களில் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

ALSO READ: உடல்நலம் பாதித்த பெண் யானை..! 4-வது நாளாக தொடரும் சிகிச்சை..!!

நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும், மறுசீரமைப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments