Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக கனமழை பெய்யும்: கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Siva
வியாழன், 16 மே 2024 (17:46 IST)
கேரளாவில் வரும் 18ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வரை தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென வானிலை மாறி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதும் சில இடங்களில் கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம். 
 
அதுமட்டுமின்றி நெல்லையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி கேரளாவில் மே 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது 
 
மேலும் மே 20 ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு கேரள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று அறிவித்துள்ளதால் அந்த பகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments