Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த மாணவிகள்.. அரசு பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
புதன், 29 மே 2024 (14:02 IST)
பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் மாணவிகள் திடீரென சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுருண்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது என்பதும் இந்த வெயில் காரணமாக பொதுமக்கள் பெரும் துன்பத்தில் இருக்கின்றன என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் இன்று வெப்ப அலை காரணமாக ஷேக்புரா என்ற பகுதியில் அரசு பள்ளி மாணவிகள் சிலர் திடீரென சுருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனை அடுத்து ஆசிரியர்கள் மயங்கிய மாணவிகளின் முகத்தில் உடனடியாக தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்ததாகவும் அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த மாணவிகள் சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
கோடை வெயிலில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ மாணவிகள் எதற்காக பள்ளிக்கு வந்திருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments