Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசிடிவி கேமிரா வைத்து உள்ளாடை திருடனை கண்டுபிடித்த பெண்.. ஆனால் கடைசியில் ஏற்பட்ட சோகம்..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (10:49 IST)
குஜராத்தில் மொட்டை மாடியில் துணி காயப்போடும் ஒரு பெண் உள்ளாடைகள் மட்டும் காணாமல் போவதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ளாடை திருடனை கண்டுபிடிப்பதற்காக சிசிடிவி வைத்து திருடனை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் பகுதியில் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து காணாமல் போனதால் பெண் ஒருவர் மொட்டை மாடியில் துணி காய போடும் இடம் அருகே ரகசிய கேமரா வைத்துள்ளார்.
 
இந்த நிலையில் அந்த கேமரா மூலம் உள்ளாடைகளை திருடி சென்றது அவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் என்பதை கண்டுபிடித்தார். இதனை அடுத்து அந்த பெண் பக்கத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு மலை போல் உள்ளாடை குவிந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சி அடைந்தார். 
 
இதனை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்ததாகவும் அப்போது சிசிடிவி மூலம் திருட்டை கண்டுபிடித்த பெண்ணின் மண்டை உடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments