Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க அரசு முடிவு! – விலையை குறைக்க திட்டம்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:13 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் “ரெம்டெசிவிர்” மருந்து உற்பத்தியை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா கடந்த சில வாரங்களாக மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டறியப்பட்ட “ரெம்டெசிவிர்” மருந்து கொரோனா ஆரம்ப தொற்று உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருந்தை இந்தியாவில் 7 நிறுவனங்கள் தயாரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா அதிகரிப்பு காரணமாக “ரெம்டெசிவிர்” மருந்து குப்பிகளை அதிகமாக தயாரிக்க மத்திய அரசு மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மருந்தின் விலையை 3500 ரூபாய்க்கும் கீழ் குறைக்க மருந்து நிறுவனங்களும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments