Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கிசான் விகாஸ் பத்திரங்கள் - 100 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2014 (16:21 IST)
சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், கிசான் விகாஸ் பத்திரங்களை மத்திய அரசு, இன்று மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இன்று நடைபெற்ற விழாவில் இதனைச் சிறு முதலீட்டாளர்களுக்கு வழங்கினார். 
 
இந்தப் பத்திரத்தின் குறைந்தபட்ச முதலீடு, ஆயிரம் ரூபாயாக இருக்கும். ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம், 50 ஆயிரம் என்ற மதிப்புகளில் பத்திரம் கிடைக்கும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.
 
100 மாதங்களில் முதலீடு செய்த தொகை, இரட்டிப்பாகும்.
 
இதில் முதலீடு செய்யப்படும் தொகையை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. ஆனால், இதைப் பிணையாக வைத்துப் பணம் பெற முடியும்.
 
தொடக்கத்தில், அஞ்சல் நிலையங்களில் கிசான் விகாஸ் பத்திரங்கள் கிடைக்கும். படிப்படியாக இதர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 
2014 ஜூலை மாதம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததற்கு இணங்க, இந்தப் பத்திரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments