Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சி தலைமையில் காந்தி குடும்பம் கிடையாது! – பிரியங்கா காந்தி உறுதி!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:17 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விரைவில் தலைமை தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் அவர் கண்டிப்பாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க மாட்டார் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் அதற்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் வலியுறுத்தியும் பதவியில் நீடிக்க அவர் மறுத்து விட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பொறுப்பில் சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸின் தலைவர் பதவிக்கான நபரை தேர்ந்தெடுக்கும் செயல்பாடுகள் விரைவில் தொடங்க இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தலைவர் பதவியில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் வர மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். தற்போது பிரியங்கா காந்தி கூறுகையில் ராகுல் காந்தியின் கருத்தை ஆமோதித்து பேசியுள்ளார்.

காங்கிரஸில் குடும்ப ஆட்சி நடைபெறுவதாக பலர் அடிக்கடி குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்த பேச்சை உடைப்பதற்காக காந்தி குடும்பம் இந்த முடிவை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments