Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: முக்கிய பிரச்சனைகளை எழுப்ப திட்டம்!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (07:55 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்பட ஒரு சில முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 
 
கடந்த சில வருடங்களாகவே நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைத்து வரும் நிலையில் இன்று முதல் இந்த கூட்டத்தொடரை யும் ஸ்தம்பிக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா, மாநில கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் அந்த மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments