Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிபுராவில் கனமழையால் நிலச்சரிவு: 4 பேர் பலி

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (17:45 IST)
திரிபுராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
 
வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் திரிபுரா மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் அங்குள்ள பல்வேறு தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேவேலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் சேறு மற்றும் மண் சரிந்து மூடியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்நிலையில், அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைவில் நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த ஆய்வின் போது முதல்வருடன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments