Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.பதவி ஏற்றார் மன்மோகன் சிங்:போட்டியின்றி தேர்வு

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (12:50 IST)
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங், இன்று ராஜ்ய சபா எம்.பி.யாக பதவி ஏற்றுகொண்டார்.

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகி இருந்த பாஜக மாநிலத் தலைவர் மதன் லால் சைனி கடந்த ஜூன் மாதத்தில் காலமான நிலையில், அந்த காலியான பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரை எதிர்த்து பாஜகவினர் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை.

ஆதலால் அந்த பதவிக்கு மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று மன்மோகன் சிங் ராஜ்ய சபா எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் கடந்த 1991 முதல் 2019 வரை அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 5 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். கடந்த ஜூன் மாதம் இவரது எம்.பி. பதவிகாலம் முடிவடைந்த நிலையில் தற்போது ராஜஸ்தானிலிருந்து எம்.பி.பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments