Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்....

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (19:17 IST)
பஞ்சாப்  மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் 117 தொகுதிகள் கொண்ட  பஞ்சாப் மா நிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில்  வெற்றி பெற்றது.

ஆளும் கட்சியான காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸிலிருந்து விலகிய  முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்,  பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி இத்தேர்தலில் போட்டியிட்ட  அவர், தான் போட்டியிட்ட பட்டியாலா தொகுதியில் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில், தற்போது,. பஞ்சாப் மா நிலத்தில் பகவன் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்  பாஜகவில் இணைந்து, தன் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும்  பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments