Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா! – காலச்சக்கர பூஜையில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (15:26 IST)
பீகாரில் உள்ள புத்தகயாவிற்கு திருவிழாவிற்கு வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவில் நடைபெறும் காலச்சக்கர பூஜைக்காக பல நாடுகளில் இருந்து பயணிகள் வருகை தந்துள்ளனர்.

பூஜைக்கு வந்த 32 வெளிநாட்டு பயணிகளுக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களில் இருவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். ஒருவர் மியான்மர் மற்றும் ஒருவர் தாய்லாந்தை சேர்ந்தவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அங்குள்ள உணவகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments