Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் மழைக்கே இந்த நிலையா? முடங்கியது மும்பை!

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (16:19 IST)
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் தெலுங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
 
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அடுத்த நான்கு நாட்களுக்கு மிக பலத்த மழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
மும்பையில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. 
 
ஒரு நால் மழைக்கே மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  
 
மேலும், அங்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினரும் துணை ராணுவப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர்கள் பெரிய கருப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. 20 வயதில் சோகம்..!

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும்.. மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞர் கைது..!

‘ரூ’ மட்டும் போட்டால் போதுமா? தமிழை பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்றுங்கள்: ராமதாஸ்

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்

அடுத்த கட்டுரையில்
Show comments