Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெலிவரி செய்ய தாமதமானதால் ஃப்ளிப்கார்ட் ஊழியரை கத்தியால் குத்திய பெண்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (16:11 IST)
பெண் ஒருவர் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்திருந்த போன் வர தாமதமானதால், டெலிவரி செய்த இளைஞரை 20 முறை கத்தியால் குத்தியுள்ளார். 
டெல்லியைச் சேர்ந்தவர், கமல் தீப் (30). இவர், ஃப்ளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். போனை டெலிவரி செய்யும் பையன், கமல் தீப் வீட்டின் சரியான முகவரி தெரியாத நிலையில், 2 நாட்கள் தாமதித்து போனை கமலிடம் கொண்டு சேர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல் தீப், டெலிவரி செய்ய வந்த பையனை கத்தியால் 20 முறைக்கு மேல் குத்தியுள்ளார். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஃப்ளிப்கார்ட் ஊழியரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊழியரை தாக்கிய கமல் தீப்பை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments